இளைஞர்களின் கால்களை உடைத்துவிட்டு தற்போது பேண்டேஜ் போட முயல்கிறீர்கள்”என மத்திய அரசின் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த 22-ந் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரானது வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் கடந்த ஜீலை 23-ம் தேதி 2023-24ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பேசிய அவர் “ஏற்றுமதியை பாதிக்கக்கூடிய உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 முதல் 7 சதவீதம் வரை வளரும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக இன்று மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எனது பேச்சைக் கேட்டு பாஜகவினர் சிரித்தாலும், உள்ளூக்குள் ஒருவித அச்சத்தில்தான் உள்ளனர். தொடர்ந்து பேசிய அவர், கல்விக்கு குறைந்த நிதி, ஜி.எஸ்.டி என்பது வரிவிதிப்பு தீவிரவாதம். ஜி.எஸ்.டி மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அழிந்து வருகின்றன. அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் சேர்க்கப்படுபவர்களுக்கு ஒரு ரூபாய் கூட ஓய்வூதியமாக வழங்கப்படுவது இல்லை! மோடி அரசு என்பது வேலைவாய்ப்பின்மை, வினாத்தாள் கசிவின் அர்த்தமாக மாறிவிட்டது, ஒன்றிய பட்ஜெட்டில் கடந்த 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கல்விக்கு குறைந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது! சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்றவை எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் பேசிய அவர் “இளைஞர்களுக்கு இண்டெர்ன்ஷிப் திட்டம் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய காமெடி. இளைஞர்களின் கால்களை உடைத்துவிட்டு தற்போது பேண்டேஜ் போட முயல்கிறீர்கள்”“கொரோனா காலத்தில் கை தட்டுவது, |செல்போனில் டார்ச் அடிப்பதுதான் இளைஞர்களுக்கு நீங்கள் கொடுத்த வேலைவாய்ப்பா?”என கேள்வி எழுப்பினார்.