
கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டில் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட பிஷப், போப் பிரான்சிஸ் அறிவுறுத்தலின்படி பிரான்கோ மூலக்கல் தனது பதவியை தற்போது ராஜினாமா செய்திருக்கிறார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரான்கோ மூலக்கல் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் பகுதியில் பிசப்பாக பதவி வகித்து வந்தார். அவர் மீது திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி பாலியல் புகார் அளித்திருந்தார். இது கேரளாவில் மற்றும் பஞ்சாபில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன.

பிரான்கோ மூலக்கல் கேரளாவுக்கு வந்து சென்ற சமயத்தில் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று அந்த கன்னியாஸ்திரி தனது புகாரில் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டில் பிசப் பதவியில் இருந்து பிரான்கோ மூலக்கல் தற்காலிகமாக நீக்கப்பட்டு இருந்தார். இந்த பாலியல் வழக்கு கேரள நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணையில் பிரான்கோ மூலக்கல் நிரபராதி என்று கேரளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் கன்னியாஸ்திரி.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிசை நேரில் சந்தித்து பேசினார் பிரான்கோ மூலக்கல் . அந்த சந்திப்பில், ஜலந்தருக்கு புதிய பிசப் நியமிக்கும் வகையில் தன் பதவியை ராஜினாமா செய்யும்படி போப் பிரான்சிஸ் அறிவுறுத்தி இருக்கிறார். அதன்படி நேற்று ஜலந்தர் பிசப் பதவியை ராஜினாமா செய்துள்ளார் பிரான்கோ மூலக்கல்.