தற்கொலைக்கு ஏர்போர்ட்டை தேர்ந்தெடுத்த பெண்… ஏன் தெரியுமா?
ஐதராபாத் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பெங்களூரை சேர்ந்த பெண் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பெண் ஒருவர் இரண்டாவது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டார். உடனடியாக நொடி பொழுதில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை சி.ஐ.எஸ்.எப். அதிகாரிகள் காப்பாற்றினர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரனையில் பெங்களூரைச் சேர்ந்த ஸ்வேதா என தெரிய வந்தது.
ஸ்வேதா தற்கொலை முடிவு எடுத்ததற்கு குடும்ப பிரச்சனை காரணமா? அல்லது விமானத்தில் ஏதாவது நடந்ததா? எதற்காக விமான நிலையத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.