spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி வழக்கு... 4 மாதத்தில் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய...

நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி வழக்கு… 4 மாதத்தில் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

-

- Advertisement -

2019ஆம் ஆண்டு நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் 4 மாதத்தில் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேர்ச்சி பெற்று சென்னையை சேர்ந்த மாணவர்கள் தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. பின்னர் விசாரணையின்போது பல்வேறு மாணவர்கள் இதுபோல ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது தெரிய வந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் மாணவர்கள், பெற்றோர்கள் ஆழ்மாறாட்டம் செய்ய உதவிய புரோக்கர்கள் உள்ளிட்ட 27 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

we-r-hiring

இந்த வழக்கில் 27-வது குற்றவாளியாக உள்ள தருண் மோகன் வழக்கிலிருந்து, தன்னை விடுவிக்கும்படி மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணையின்போது நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள்
இந்தியாவில் இல்லாத ஒரு மாணவருக்கு 3 மாநிலங்களில் நீட் தேர்வு எழுதியது உள்ளிட்ட பல முறைகேடுகள் நடந்ததை சிபிசிஐடி போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் ஒத்துழைப்பு தராத தேசிய தேர்வு முகமைக்கு நீதிமன்றம் பல்வேறு கேள்விகளையும் எழுப்பி இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி தரப்பில் ஆஜரான அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார், இந்த வழக்கில் குற்றவாளிகள் பல்வேறு மாநிலங்களில் உள்ளதாலும், தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டதாலும், மேலும் ஆதார் விவரங்கள் தேவைப்படுவதால் இந்த வழக்கில் சிபிஐ உதவி கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விரைவில் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நீட் தேர்வுகளில் ஒன்றிய அரசு நடத்தி வரும் முறைகேடுகள்! - வைகோ கண்டனம்
இதனை பதிவுசெய்த நீதிபதி புகழேந்தி, நீட் தேர்வில் ஆள்மாறாட்ட முறைகேடு என்பது மிகப்பெரிய ஒரு முறைகேடாக பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் உதவி கேட்கப்பட்டுள்ளதால், இதில் சிபிசிஐடி போலிசாருக்கு தேவைப்படும் வழக்கு விசாரணை ஆவணங்களை தேசிய தேர்வு முகமை வழங்க வேண்டும் என்றும், சிபிஐ உள்ளிட்ட ஒன்றிய விசாரணை அமைப்புகள் தேவையான ஆவணங்களை கொடுத்து உதவி முழு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே இந்த வழக்கின் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய முடியும் என்றும் தெரிவித்தார்.

எனவே ஒன்றிய விசாரணை அமைப்புகள் சிபிசிஐடிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, சிபிஐ உதவியுடன் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும், விசாரணை அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் சிபிசிஐடி நீதிமன்றத்தை நாடலாம் என்றும் கூறினார். மேலும் இந்த வழக்கில் மனுதாரர் வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது என்றும், எனவே அவருடைய மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் உத்தரவு பிறப்பித்தார். மேலும் நீட் ஆள் மாறாட்ட முறைகேடு வழக்கை 4 மாதத்தில் சிபிசிஐடி விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

MUST READ