உயர்த்திய பால் விலையைத் திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் தலைமையில் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களும், மாவட்ட நிர்வாகிகளும், துணை அமைப்பினரும் மற்றும் தொண்டர்கள் என ஏரளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே வாசன் பேசியதாவது, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை தமிழக அரசு உயர்த்தி மக்கள் தலையில் சுமையாக வைத்திருக்கிறார்கள். மக்கள் நலன் கருதி தமிழக அரசு மீண்டும் விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் உள்ள உண்மை நிலையை விளக்கி இருக்கிறார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு 1000 ரூபாய் கொடுப்பது பதிலாக 3000 முதல் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சென்ற ஆண்டு திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது அதிமுக மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யாகும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு என்று குற்றம் சாட்டினார். ஏழை எளிய மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி பிடிக்க கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது என்று கூறினார். திமுகவின் எதிர்மறை வாக்கு அதிமுக தலைமையிலான ஆட்சியை அமைக்கும் என்று ஜி.கே.வாசன் கூறினார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது வாக்கு வங்கிக்காக மட்டுமே ஆளுநரை சந்தித்தாக ஜி.கே.வாசன் குற்றம் சாட்டினார்.