Homeசெய்திகள்அரசியல்காங்கிரஸின் கபட நாடகம்... தோலுரித்த நரசிம்ம ராவின் அண்ணன்..!

காங்கிரஸின் கபட நாடகம்… தோலுரித்த நரசிம்ம ராவின் அண்ணன்..!

-

- Advertisement -

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடத்துக்கு இடம் ஒதுக்கிய விவகாரத்தில் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவின் அண்ணன் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது. இந்த சர்ச்சைக்கு இடையில் நரசிம்ம ராவின் சகோதரர் மனோகர் ராவ் காங்கிரசை குற்றம்சாட்டியுள்ளார்.

‘‘மன்மோகன் சிங்கிற்காக போராடும், கருத்துச் சொல்லும் நபர்கள் காங்கிரஸ் தலைவர் பிவி நரசிம்மராவுக்கு நிகழ்ந்ததை 20 ஆண்டுகளை பின்னோக்கிப் பார்க்க வேண்டும். அவர்கள் நரசிம்மராவுக்கு எவ்வளவு மரியாதை கொடுத்தார்கள் என்றும் பார்க்க வேண்டும். அவரது இறுதிச் சடங்கில் கூட சோனியா காந்தி பங்கேற்கவில்லை’’ எனக்கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் சகோதரர் மனோகர் ராவ், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ‘‘காங்கிரஸ் கட்சி 20 ஆண்டுகளை பின்னோக்கிப் பார்க்க வேண்டும். பிவி நரசிம்மராவுக்கு எவ்வளவு மரியாதை கொடுத்தார்கள் என்று பார்க்க வேண்டும். அவரது இறுதிச் சடங்கில் சோனியா காந்தி கூட பங்கேற்கவில்லை. காங்கிரஸ் கட்சி அவருக்கு ஒரு சிலை கூட கட்டவில்லை. பாரத ரத்னா கொடுக்கவில்லை. உங்கள் சம்பிரதாயங்களை நீங்கள் முடித்தால், டாக்டர் மன்மோகன் சிங்கின் நினைவிடத்திற்கு பாஜக கண்டிப்பாக நிலம் கொடுக்கும். நரசிம்மராவுக்காக காங்கிரஸ் துரோகம் மட்டுமே செய்துள்ளது.’’ எனத் தெரிவித்துள்ளார்.

பிவி.நரசிம்ம ராவின் பேரன் என்வி சுபாஷ், காங்கிரஸை மேலும் சாடியுள்ளார். ‘‘நரசிம்ம ராவுக்கு 20 ஆண்டுகள் ஆகியும் காங்கிரஸ் கட்சி மரியாதை அளிக்கவில்லை. ராகுல் காந்தி இப்போது பாஜக மீது குற்றம் சாட்டுவதற்குஅவருக்கு எந்த தகுதியும் இல்லை. பிரணாப் முகர்ஜிக்கு கூட நீங்கள் மரியாதை கொடுக்கவில்லை. பிவி நரசிம்மராவ் தனது பெரும்பாலான நேரத்தை டெல்லியில் கழித்ததார். இருந்தபோதும் மாநில கட்சியை சேர்ந்த முதல்வர் மறைந்த முன்னாள் முதல்வர் ஓய்.எஸ்.ராஜசேகரெட்டி, ஹைதராபாத்தில் அவரது நினைவிடத்தை கட்ட முயற்சித்தார். ஆனால் சோனியா குடும்பம் வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருந்தது’’ என அவர் வேதனைப்பட்டுள்ளார்.

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலத்திற்குப் பிறகு, நிகாம் போத்காட்டைத் தேர்ந்தெடுத்ததற்காக மோடி அரசை ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். ‘‘மன்மோகன் சிங் 10 ஆண்டுகாலம் இந்தியாவின் பிரதமராக இருந்தவர். அவரது பதவிக்காலத்தில் நாடு பொருளாதார வல்லரசாக மாறியது. அவரது கொள்கைகள் இன்னும் நாட்டின் ஏழை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஆதரவாக உள்ளன

இன்றுவரை, அனைத்து முன்னாள் பிரதமர்களின் கண்ணியத்தையும் மதித்து, அவர்களின் இறுதி சடங்குகள் உரிய இடத்தில் சமாதிகளில் செய்யப்பட்டது. இதனால் ஒவ்வொரு நபரும் சிரமமின்றி அஞ்சலி செலுத்த முடியும். டாக்டர். மன்மோகன் சிங் நமது உயரிய மரியாதைக்கும் கல்லறைக்கும் தகுதியானவர். தேசத்தின் இந்த மகத்தான மகனுக்கும் அவரது புகழ்பெற்ற சமூகத்திற்கும் அரசாங்கம் மரியாதை காட்டியிருக்க வேண்டும்.’’ என்று தெரிவித்து இருந்தார். ஆனாலும் காங்கிரஸ் கட்சி மத்தில் ஆளும் போது, அதற்கு முன்னாள் இருந்த பிரதமர்களான மொரார்ஜி தேசாய், ஏ.பி.சிங், பி.வி.நரசிம்மராவ் ஆகியோர் மறைந்த போது அவர்களுக்காக நினைவிடமோ, இறுதிச்சடங்கையோ நடத்த காங்கிரஸ் முன் வரவில்லை.

சீக்கியர் வாக்குவங்கிகளை கவரவே இப்போது மன்மோகன் சிங்கின் மறைவை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் ஆதாயம் தேட முயறிப்பதாக கூறப்படுகிறது.

MUST READ