திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சரானார் பி. கே. சேகர்பாபு. இவர் அமைச்சர் ஆன பின்னர் தான் அந்த துறை ஒரு பரபரப்பான துறையாக மாறியிருக்கிறது. அதே நேரத்தில் சர்ச்சைகளுக்கும் சலசலப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது.
சமயபுரம் கோயிலின் சேமிப்பு நிதியிலிருந்து 422 கோடி ரூபாய் குறைந்து இருக்கிறது என்றும், அந்த நிதியில் இருந்து தான் இரண்டு கார்கள் வாங்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை இடையானையர் ஆணையருக்கு இணை ஆணையர் பணம் வழங்கப்பட்டிருக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ரமேஷ் என்பவர் இந்த குற்றச்சாட்டினை சுமத்தி இருக்கிறார்.
இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்திருக்கிறார் . சமயபுரம் கோவிலில் வைப்பு நிதி 113 கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்திருக்கிறது. கோயில் நிர்வாகத்திற்கு பழைய கார்களுக்கு பதிலாக புதிய கார்களை வாங்குவது வழக்கமான ஒன்றுதான் . இதில் எந்த குற்றமும் இல்லை என்று எடுத்துச் சொல்லி இருக்கிறார்.
மேலும், சமயபுரம் கோயிலில் வைப்பு நிதியில் இருந்து காணாமல் போய் இருந்தாலும் வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அந்த குற்றச்சாட்டின் படி அது உண்மையாகவே இருந்தாலும் வைப்பு நிதி எப்படி உயர்ந்திருக்கும் என்ற கேள்வியை எழுப்பி உள்ளார்.
தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்திருக்கும் பி.கே. அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறைக்கு கலங்கத்தை ஏற்படுத்தி தங்களின் பணி வேகத்தை குறைக்கின்ற நப்பாசையில் தான் இப்படி விஷம பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன என்கிறார்.
இப்படி விஷம பிரச்சாரம் பரப்பி வருவோர் மீது இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக கூறியிருக்கிறார்.