Homeசெய்திகள்அரசியல்மூச்சு காற்று உள்ளவரை நானே தலைவர்! ராமதாஸ் திட்டவட்டம்

மூச்சு காற்று உள்ளவரை நானே தலைவர்! ராமதாஸ் திட்டவட்டம்

-

- Advertisement -

2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அன்புமணி அனைத்தையும் எடுத்துக் கொள்ளட்டும் என்று முன்பு கூறியிருந்த பாமக நிறுவனர் தற்போது அன்புமணிக்கு தலைவர் பதவி இல்லை என்றும் என் மூச்சு காற்று அடங்கும் வரை பா.ம.க தலைவர் பதவியை அன்புமணிக்கு வழங்க மாட்டேன் என தெரிவித்துள்ளாா்.மூச்சு காற்று உள்ளவரை நானே தலைவர்! ராமதாஸ் திட்டவட்டம் “2026 தேர்தலுக்குப் பின் தலைவர் பதவியை கொடுத்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அன்புமணியின் செயல்பாடுகளை பார்க்கும்போது என் மூச்சுக்காற்று அடங்கும் வரை தலைவர் பதவியை வழங்க மாட்டேன். நான் ஒரு நல்ல தந்தையாக வழிகாட்டியாக இருந்திருக்கிறேன் ஆனால் இந்த மாநாடு மற்றும் மாநாட்டிற்கு பிறகு நடக்கின்ற செயல்களை பார்க்கும்போது எனக்கு மிக மிக வருத்தமாக இருக்கிறது.  ஆனாலும் கட்சியின் கொஞ்சம் கூட குறைவில்லாமல் எனக்கு வருகிற ஆதரவு அதிகமாக உள்ளது.

இந்த தேர்தலுக்குப் பிறகு நான் தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுக்கிறேன் என்று சொல்லியதற்கே நூற்றுக்கு 99% பேர் ஏன் அப்படி ஐயா சொன்னார்கள்? அப்படி சொல்லி இருக்கக் கூடாது?  கடைசி வரை அய்யா தலைவராக இருக்க வேண்டும், என்று 99% பேர் சொல்லுகிறார்கள். மீதமுள்ள அந்த (1%) ஒரு சதவீதம் மட்டும் அன்புமணியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.. அவர்களுடைய வார்த்தை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப என்னுடைய மூச்சுக்காற்று நிற்கும் வரை அந்த பதவியில் நான் இருப்பேன்.  என் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் எந்த சூழலிலும் அரசியலுக்கு வரக்கூடாது என கட்சி ஆரம்பிக்கும் போது கூறினேன். ஆனால் அதனை காப்பாற்ற முடியவில்லை. ” என்று தெரிவித்தார்.மூச்சு காற்று உள்ளவரை நானே தலைவர்! ராமதாஸ் திட்டவட்டம்

தலித் எழில்மலை , பொன்னுசாமி மற்றும் இன்னும் சிலருக்கு அந்த பொறுப்புகளை கொடுத்தபோது அவர்களுடைய செயல்பாடுகள் மனதிற்கு திருப்தியாக இல்லாத நிலையில்,  அன்புமணிக்கு கொடுக்க வேண்டும் என்று கட்சியினுடைய மூத்த தலைவர்கள் எல்லாம் வற்புறுத்தியதன் பேரில் மத்திய அமைச்சர் பொறுப்பை  அவருக்கு வழங்கினேன். ஆனால் இரண்டரை ஆண்டுகளிலேயே என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை; நான் அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்து விடுகிறேன் என அன்புமணி கூறினார்.

அவரிடம் தினம் தினம் பேசி இப்படி செய்ய வேண்டும், அப்படி செய்ய வேண்டும் என்று கூறி அவரை சமாதானப்படுத்தினேன். அதன் பிறகு இரண்டரை ஆண்டுகள் நன்றாக செய்தார்.  உலக அளவில் விருதுகள் கூட பெற்றார். ஆனாலும் இப்போது தந்தை கிட்ட விருது வாங்க முடியவில்லை.

தந்தையை மதிக்க வேண்டும். தந்தை தாயை மதிக்க வேண்டும் என்று சொன்னாலே அன்புமணிக்கு கோபம் வந்து விடுகிறது.   celebrate your parents when they are alive. தந்தை தாயை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இந்த வார்த்தையை நீங்கள் அவரிடம் சொன்னால் நான் மகிழ்ச்சியாக தானே வைத்திருக்கிறேன் என்று கூறுகிறார்.  மைக்கை தூக்கி வீசுவது, பாட்டிலை தூக்கி அடிப்பது என்றிருப்பவர் எப்படி பெற்றோரை மகிழ்ச்சியாக வைத்திருப்பார்.

தருமபுரி, சேலம் போகும்போது மைக் வைத்து பேசக்கூடாது.  200 பேருக்கு மேல் கூட கூடாது . என்னை பார்க்க வேண்டும் என்றால் நான் தங்கி இருக்கும் உணவு விடுதிகளுக்கு வந்து தான் பார்க்க வேண்டும் என்று சொல்லலாமா? யார் ஆரம்பித்த கட்சி இது; தனி ஒரு மனிதனாக 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று இரவு பகலாக,  நான் பட்ட பாடு சொல்லி மாலாது.  அவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறேன்; கட்சிக்காக உழைத்திருக்கிறேன்.  வன்னியர் சமுதாய மக்களுக்காக மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள 324 சமுதாயங்க  சமுதாயங்களுக்கும் நான் பாடுபட்டு வருகிறேன்.  என்னுடைய முகநூலில்,  ட்விட்டரில்  தொடர்ந்து  எல்லா சமுதாயத்திற்கும் பொருந்துகிற மாதிரியான அறிக்கைகளை வெளியிடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.  இது போன்று யாரும் தமிழகத்தில் கொடுத்திருக்க மாட்டார்கள்.

மூச்சு காற்று உள்ளவரை நானே தலைவர்! ராமதாஸ் திட்டவட்டம்

அன்புமணியின் செயல்பாடுகள் இந்த மாநாட்டிற்கு பிறகு மிகவும் மோசமாகிவிட்டது. அன்புமணியே இங்கு வரும்போது எல்லாம் சொல்லுவார்;   அவரிடம் இன்னும்  எத்தனை ஆண்டுகளுக்கு நான் இருக்கப் போகிறேன் என்று கூறினால், “நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு நன்றாக இருப்பீர்கள்” என்று அவர் வாயால் கூறுவார். அப்படி கூறியவர் தற்போது மார்பிலும் முதுகிலும் ஈட்டியால் கூட்டிக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட வேதனையை அனுபவிக்கிறேன்.  தூக்க மாத்திரையை போட்டால் கூட தூக்கம் வருவதில்லை. அன்புமணியை நினைக்கும் போதெல்லாம் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.  ஆனால் அவரை நினைக்காமலும் இருக்க முடியவில்லை;  ஆனால் அது பாசத்திற்காக அல்ல; அது எல்லாம் போய்விட்டது.  ராமாயணத்தில் தசரத சக்கரவர்த்தி ராமருக்கு ஆணையிடுவார்; 14 வருடம் வனவாசம் செல்ல வேண்டும் என்று சொல்லும்போது ராமருடைய முகம் அன்று பூத்த தாமரை மலர் போல் பிரகாசமாக இருந்ததாக கம்பன் வர்ணித்திருக்கிறார்.  நான் என்ன அன்புமணியை 14 ஆண்டுகள் வனவாசத்திற்கா செல்லச் சொல்கிறேன்.  செயல் தலைவராக இருக்க வேண்டும் என்று தான் சொல்கிறேன்.

அனைத்து பத்திரிகையாளர்களையும் அழைத்து ஐயா என்னை,  செயல் தலைவராக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். செயல் தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து ஐயா இடுகின்ற கட்டளையை செய்வேன் என்று சொன்னால் எப்படி இருக்கும்., என் மனம் எப்படி குளிர்ந்திருக்கும். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று சொன்னால், அதெல்லாம் பொய் என்று அன்புமணி  கூறுகிறார். இப்போது போய் நீங்கள் கேட்டால் கூட நான் செயல்  தலைவராக இருப்பேன்;  ஐயா சொல்வது எல்லாம் கேட்பேன்; என்று சொல்லுவாரே தவிர,  நடப்பதெல்லாம் வேறாக இருக்கும்.மூச்சு காற்று உள்ளவரை நானே தலைவர்! ராமதாஸ் திட்டவட்டம்பாட்டாளி சொந்தங்களே என்று கூறும்போது  எனக்கு ஏற்படும் பூரிப்பு சொல்லி மாலாது.  ஆனால் அன்புமணியை பார்க்கும்போது ஏற்படுகின்ற அதிர்ச்சி, மனக்குமுறல்கள், எனக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. சேலம் சென்றிருந்தபோது இதேபோன்று பிபி அதிகமாகி விட்டது. அங்கு  மருத்துவர் சரவணன் பல்வேறு சிகிச்சைகளை செய்து என்னை சரி செய்தார்.  இந்தக் ட்சியை சுயம்புவாக உருவாக்கிய  என்னையே  மைக் வைத்து பேசக்கூடாது என்று  கட்டுப்பாடு விதித்தார்.  பின்னர் 200 பேருக்கு மேல் கூடக் கூடாது என்று கட்டளை இடுகிறார்.  கட்சியின் நிறுவனருக்கே இப்படி கட்டைளையிடுகின்ற  உரிமையை நான் அவருக்கு கொடுக்கவில்லை. ஆகையால் என் மூச்சுக்காற்று நிற்கும் வரை நான் தான் பாமக நிறுவனர், தலைவர்.” என்று கூறினார்.  மேலும் காலியாக உள்ள இளைஞரணி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையேயான பனிப்போர் வெளிப்படையாகவே வெடிக்கத் தொடங்கியுள்ள நிலையில்,ராமதாஸின் இந்த நிலைபாடு குறித்து தமிழக அரசியலில் பல போராட்டங்களை நடத்தி, வன்னியர் சமூக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வளர்ந்துள்ள பாமகவின் நிலைமை பரிதாபமான சூழலை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம்.. தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது… டாக்டர் ராமதாஸ் கொதிப்பு!

MUST READ