spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்"சரத் பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

“சரத் பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

-

- Advertisement -

 

"சரத் பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
FILE PHOTO

கடந்த 1999- ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் சரத் பவார். கட்சியின் தலைவர் பதவியில் சுமார் 24 ஆண்டு பதவி வகித்து வந்த சரத் பவார், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். இந்த நிலையில், சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவுக்கும், அவரது அண்ணன் மகன் அஜித் பவாருக்கும் இடையே கட்சியை கைப்பற்றுவதில் மோதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

we-r-hiring

ஜெ., ஆட்சியில் கொண்டு வந்த நில அபகரிப்பு மசோதா அரசாணை ரத்து

இந்த சூழலில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார், கடந்த மே 2- ஆம் தேதி அறிவித்திருந்தார். சரத் பவாரின் அறிவிப்பு அரசியல் கட்சிகளின் தேசிய தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!

இந்த நிலையில், தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “வரும் 2024- ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் சரத் பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாட்டில் மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவதில் முக்கியமான தலைவர்களில் ஒருவர் சரத் பவார். எனவே, முடிவை மறுபரிசீலனை செய்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

MUST READ