- Advertisement -
மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்ட திமுக இளைஞரணி 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி, இன்று தனது வெற்றிகரமான 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

கொள்கைப் பணி மற்றும் மக்கள் பணிகளைக் களத்திற்கும், காலத்திற்கும் ஏற்றார்ப் போல் இன்னும் வீரியத்துடன் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
