Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணையும் சிம்பு, ஏ ஆர் ரகுமான் கூட்டணி!

மீண்டும் இணையும் சிம்பு, ஏ ஆர் ரகுமான் கூட்டணி!

-

‘பத்து தல’ படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு தனது 48வது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எனும் திரைப்படத்தை இயக்கியவர்.

தற்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் STR 48 படத்தை இயக்க இருக்கிறார். இதில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் கமல்ஹாசன் இதில் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் சமீப காலமாக செய்திகள் பரவி வருகிறது. மேலும் இப்படம் ஹிஸ்டாரிக்கல் பீரியாடிக் படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சிம்பு மற்றும் ஏ ஆர் ரகுமான் இருவரின் கூட்டணி விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, செக்கச் சிவந்த வானம், வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்களில் இணைந்திருந்தது தற்போது 6வது முறையாக STR48 இல் இணைய உள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

MUST READ