spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டு”சூப்பர் 8 சுற்று” - ஆஸ்திரேலிய அணிக்கு 149 ரன்கள் இலக்கு!

”சூப்பர் 8 சுற்று” – ஆஸ்திரேலிய அணிக்கு 149 ரன்கள் இலக்கு!

-

- Advertisement -

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ”சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலாவது பேட்டிங்கில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 163 ரன்கள் எடுத்துள்ளது.

we-r-hiring

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்நிலையில் இன்று நடைபெறும் ’சூப்பர் 8’ சுற்றில் 48வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆப்கானிஸ்தான் அணி ரஷித் கான் தலைமையிலும் ஆஸ்திரேலியா அணியானது மிட்செல் மார்ஷ் தலைமையிலும் களம் கண்டன. இந்த ஆட்டமானது வெஸ்ட் இண்டீஸ் உள்ள அர்னாஸ் வாலே மைதானத்தில் இன்று காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரமனுல்லா குர்பாஸ் 60 ரன்களிலும் இப்ராஹிம் சட்ரன் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 148 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சு தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தற்போது வரை அணியானது 7 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 46 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

MUST READ