Homeசெய்திகள்விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் - இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் – இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

-

- Advertisement -

விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது,

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி இன்று தொடங்கியது. இந்திய அணியில் காயம் காரணமாக ராகுல் மற்றும் ஜடேஜாவுக்கு இப்போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு பதிலாக ரஜத் படிதார், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பதிலாக முகேஷ் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் தீவிரமாக விளையாடி வருகிறது.

இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித்சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் இணைந்து 12 ஒவர்களில் 28 ரன்கள் எடுத்து விக்கெட் ஏதுமின்றி விளையாடி வருகின்றனர்.

MUST READ