Homeசெய்திகள்விளையாட்டுநார்வே செஸ் தொடர் - கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!

நார்வே செஸ் தொடர் – கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!

-

நார்வே செஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை, இந்திய வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தி அசத்தியுள்ளார்.

நார்வே நாட்டில் சர்வதேச அளவிலான கிளாசிக்கல் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சீனாவை சேர்ந்த உலக சாம்பியன் டி லிரென், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்ளிட்ட 6 பேர் ஓபன் சுற்றில் பங்கேற்றனர். இந்த சுற்றில் ஒவ்வொரு முறையும், இரண்டு தடவை மோத வேண்டும். முதல் சுற்றில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா இரண்டாவது சுற்றில் சீன வீரர் டிங் லிரெனிடம் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் மேக்னஸ் கார்ல்சனும், இந்தியாவின் பிரக்ஞானந்தாவும் போட்டியிட்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கார்ல்சனின் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்த பிரக்ஞானந்தா இறுதியில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 3 புள்ளிகள் முன்னிலை பெற்று புள்ளிப்பட்டியலில் 5.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

 

MUST READ