- Advertisement -
பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளவர்களில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து முன்னணியில் உள்ளவர் ஆவார். இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் பி.வி.சிந்து, சீனாவின் ஹிபிங்ஜீயாவோ உடன் மோதினார்.

இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சீன வீராங்கனை முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார். அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த அவர் 2.வது செட்டை 21-14 என எளிதில் கைப்பற்றினார். முடிவில் 21-19,21-14 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்த பி.வி.சிந்து ஒலிம்பிக் தொடரிலிருந்து வெளியேறினார்.