spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஅயர்லாந்து அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெற்றது பாகிஸ்தான் அணி!

அயர்லாந்து அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெற்றது பாகிஸ்தான் அணி!

-

- Advertisement -

அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது.

we-r-hiring

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்தநிலையில் நேற்றிரவு (இந்திய நேரப்படி) நடைபெற்ற 36வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் பாகிஸ்தான் அணி பாபர் அசாம் தலைமையிலும் அயர்லாந்து அணியானது பால் ஸ்டிர்லிங் தலைமையிலும் களம் கண்டன. இந்த ஆட்டமானது அமெரிக்காவில் உள்ள சென்ட்ரல் போர்டு ரீஜினல் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து அயர்லாந்து ஆந்த்ரே பால்பிரின் ரன் ஏதுமின்றியும் பால் ஸ்ட்ரிலிங் 1 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய லார்கன் டக்கர் 2 ரன்களிலும் ஹர்ரி டெட்டர் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக கேரத் டிலனி 31 ரன்கள் எடுத்தார்.. இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 106 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சு தரப்பில் சகீன் அப்ர்டி 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பாகிஸ்தான் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் 17 ரன்களிலும் சாய்ம் ஆயுப் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய பாபர் அசாம் 32 ரன்கள் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் அணியானது 18.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 111 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றியடைந்ததுடன் லீக் சுற்றுடன் வெளியேறியது.

 

MUST READ