spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுதென் ஆப்பிரிக்கா அணிக்கு 177 ரன்கள் இலக்கு!

தென் ஆப்பிரிக்கா அணிக்கு 177 ரன்கள் இலக்கு!

-

- Advertisement -

டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலாவது பேட்டிங்கில் 177 ரன்கள் எடுத்துள்ளது.

we-r-hiring

டி20 உலக கோப்பை தொடர் அமேரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை கோப்பையை வெல்லாத தென்னாப்பிரிக்கா அணி இப்போட்டியில் வெற்றி பெற்று முதலாவது முறையாக கோப்பையை கைப்பற்ற முயற்சிக்கும். அதே நேரம் இந்திய அணியும் இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்ற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் மத்தியில் ஆரவாரமாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 9 ரன்களும் விராட் கோலி 76 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் ரன் ஏதுமின்றியும் சூர்யகுமார் யாதவ் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடியாக விளையாடிய அக்‌ஷர் பட்டேல் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 176 ரன்கள் எடுத்தது. பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது பேட்டிங் விளையாடவுள்ளது.

MUST READ