விஜய் மாநாடு தொடங்கும் முன் அவருடன் அங்காளி பங்காளிகளாய் இணக்கமாய் இருந்து வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தடாலடியாக மோதல் போக்கை கடைபிடிக்க ஆரம்பித்தார். விஜயை வெறுப்பேற்ற ரஜினியை போய் சந்தித்தார். விஜயை கொள்கையற்றவர் என விமர்சித்தார்… கண்டித்தார்…. கதறினார்… பதறினார் சீமான். அவரது அடிப்பொடிகளுக்கும் முறுக்கேறிப்போனது. விஜய் கட்சியில் எங்கே தப்பு நடக்கும்..? விஜய் கட்சியினர் உப்புப்போட்டு சாப்பிடுகிறார்களா? இல்லை சப்புக்கொட்டி சாப்பிடுகிறார்களா? என்பதுவரை உற்று நோக்கி தப்புக் கண்டு பிடித்து வருகிறார்கள் தம்பிமார்கள்.
அதற்கு ஒரு சின்ன உதாரணம் தான் நீங்கள் கீழே படிக்க உள்ளது ‘ ‘தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினராக இருந்து வந்த பி.பி.ராஜா என்பவர் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்ததாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்து வந்ததாலும், தமிழக வெற்றிக்கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்’’ என ராமநாதபுரம் மாவட்ட தலைவர் மலர்விழி ஜெயபாலா அறிவித்து இருந்தார்.
இதனைப் பதிவிட்டு, கருத்துத் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக், ‘‘பொதுவாகக் கட்சியைவிட்டு ஒருவரை நீக்க வேண்டுமானால், அந்தக் கட்சியின் தலைமைதான் நீக்குவது தொடர்பான முடிவை எடுக்கும். ஏனென்றால், அதற்கான அதிகாரம் கட்சியின் தலைமையிடமே இருக்கும்.
இதுதான் எல்லாக் கட்சியிலும் இருக்கிற நடைமுறை!
தவெகவில் மாவட்டத் தலைவரே கட்சியைவிட்டு நீக்குகிறார். தவெகவின் பைலாவில் அப்படித்தான் இருக்கிறதா?’’ எனக் கேள்வி எழுப்பி உள்ளார். https://x.com/idumbaikarthi/status/1869246280590831728
இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாலாஜி என்கிற தவெக தொண்டன் ஒருவர், ‘‘எல்லா கட்சியும் நீங்கள் நினைப்பது போல் இயங்க வேண்டும் நினைப்பதே தவறான செயல். அவர் அவர் கட்சிக்கு விதிகள் மற்றும் விதிமுறைகள் வேறு மாதிரி இருக்கும். நீங்கள் நினைப்பது போல கட்சி நடத்த அவர் ஏன் கட்சி தொடங்க வேண்டும்? இதற்கு பதில் சொல்ல முடியுமா.? தவெக இதேபோல் நாம் தமிழர் கட்சியை விதிமுறைகளை மாற்ற வேண்டும் சொன்னால் ஏற்பீர்களா?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
‘‘அரசியலில் மழலையர் பள்ளியில் புதிதாக இணைந்துள்ளனர் தவெக. இதில் நகைச்சுவை என்வென்றால் எப்படி மழலையர் நான்.. டாக்டர், நா… கலெட்டர், நா… மிலிட்டிரி என்று பேசுவார்களோ அதைப்போல் தான் இந்த தவெக மக்களுக்கு சிரிப்பு காட்டுகிறார்கள்’’ என சீமான் தம்பி ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார்.
‘‘தினம் தினம் உங்கள் கட்சியில் இருந்து ஆயிரக்கணக்கான உறுப்பினர் வெளியே போறாங்க அத போய் தடுங்கணே! போய் மொதல்ல கட்சியை காப்பாத்துங்க அப்புறம் கேள்வி கேக்கலாம்?’’ என நாம் தமிழருக்கு பொதுவான அரசியல் பார்வை கொண்ட ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆக, பேய்க்கும் பேய்க்கும் சண்ட… அத ஊரே வேடிக்கை பார்க்குது கதையாக அல்லவா இருக்கிறது..?