Homeசெய்திகள்விளையாட்டுதென் ஆப்ரிக்க அணி த்ரில் வெற்றி - அரையிறுதி சுற்றுக்கு தகுதி!

தென் ஆப்ரிக்க அணி த்ரில் வெற்றி – அரையிறுதி சுற்றுக்கு தகுதி!

-

- Advertisement -

சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ”சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியும் மேற்கிந்திய தீவுகள் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டமானது வெஸ்ட் இண்டீஸ் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் ஏய்டன் மார்க்ராம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. கைல் மேயர்ஸ் 35 ரன்களும் சாய் ஹோப் 52 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் 135 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சு தரப்பில் தப்பிரைஸ் சம்ஸி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதனையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் தென் ஆப்ரிக்க அணி களமிறங்கியது. ஆட்டத்தின் நடுவே மழை குறுக்கிட்டதால் போட்டி 17 ஓவர்களாக மாற்றப்பட்டு இலக்கு 123 ஆக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்கம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடிய தென் ஆப்ரிக்க அணி இறுதியில் த்ரில் வெற்றி பெற்றது. அந்த அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் யான்சன் சிக்சர் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் தென் ஆப்ரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி வெளியேறியது.

 

MUST READ