Homeசெய்திகள்விளையாட்டுவெற்றிப் பயணத்தை தொடருமா சென்னை? - குஜராத் அணியுடன் இன்று மோதல்

வெற்றிப் பயணத்தை தொடருமா சென்னை? – குஜராத் அணியுடன் இன்று மோதல்

-

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

17வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 58 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்றுக்கான தகுதியை பெற்றுள்ளன. அடுத்த 2 இடங்களுக்கு ஐதராபாத், சென்னை, டெல்லி, லக்னோ இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள லீக் 59வது லீக் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

லக்னோ அணியை பழி தீர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

சென்னை அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 6 போட்டியில் வெற்றியும், 5 போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு மீண்டும் செல்லும். இதேபோல் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாகும். ஆகையால் இன்றைய போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என சென்னை அணி தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் குஜராத் அணியை பொறுத்தவரையில் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஏற்கனவே இழந்துள்ளது. ஆகையால் இன்றைய போட்டி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. குஜராத் அணி இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

MUST READ