Homeசெய்திகள்தமிழ்நாடுதவெக ஆட்சிக்கு திருமாவளவன் முட்டுக்கொடுக்கிறாரா? - உடைபடும் அரசியல் பிம்பங்கள்!

தவெக ஆட்சிக்கு திருமாவளவன் முட்டுக்கொடுக்கிறாரா? – உடைபடும் அரசியல் பிம்பங்கள்!

-

- Advertisement -

தமிழகத்தில் தவெக தலைமையிலான ஆட்சியின் 100 நாள் செயல்பாடுகள், விசிக தலைவர் தொல். திருமாவளவனின் அரசியல் நகர்வுகள் மற்றும் துரை வைகோவின் கருத்துகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.தவெக ஆட்சிக்கு திருமாவளவன் முட்டுக்கொடுக்கிறாரா? - உடைபடும் அரசியல் பிம்பங்கள்!

திருமாவளவனுக்கு பொதுமக்கள் சார்பில் கேள்வி
“திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றிருந்தால் திருமாவளவன் இன்று இப்படிப் பேசியிருப்பாரா? தமிழக சட்டமன்றத்தில் திருமாவளவன் எம்.எல்.ஏ-வாக இருந்திருந்தால், தவெக தலைவர் விஜய்க்கு முட்டுக்கொடுப்பதில் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோரை விடப் பெரிய பெர்ஃபார்மராக இருந்திருப்பார் என்று பொதுமக்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

we-r-hiring

ஜக்கி வாசுதேவை பெரியார் என்று கூறியது, ராஜபக்சவைச் சந்தித்தது போன்ற விமர்சனங்களைத் தாண்டி திருமாவளவன் கட்டியெழுப்பிய அரசியல் பிம்பம், தவெக கூட்டணியில் இணைந்து அக்கட்சிக்கு முட்டுக்கொடுப்பதன் மூலம் சுக்குநூறாக உடைந்து நொருங்கியுள்ளது. ‘ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளைதான் தவெக’, ‘விஜய் போன்றவரிடம் தமிழகம் சிக்கினால் காப்பாற்ற முடியாது’ என்று முன்பெல்லாம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த திருமாவளவனே, இன்று தவெக தவறு செய்யும்போது முட்டுக்கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது அவரது அரசியல் வறுமையையே காட்டுகிறது.”தவெக ஆட்சிக்கு திருமாவளவன் முட்டுக்கொடுக்கிறாரா? - உடைபடும் அரசியல் பிம்பங்கள்!

தமிழகத்தில் எரியும் மக்கள் பிரச்சினைகள்
“தவெக ஆட்சியில் மின்வெட்டு, முதியோர் உதவித்தொகை தாமதம் (தஞ்சாவூர் போன்ற இடங்களில் வரவில்லை) உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சென்னை பட்டினப்பாக்கத்தில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவும் சூழலில், புதிய தலைமைச் செயலகம் கட்ட மக்கள் எதிர்ப்பையும் மீறி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் பிரச்சினைகள் பற்றி எரியும்போது முதல்வர் விஜய் லண்டனுக்குப் புறப்பட்டுவிட்டார்; ஆனால் தமிழக மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள்.”

துரை வைகோவுக்கு விமர்சனம்
“மிசா காலகட்டத்தில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுபவித்த சிறைக் கொடுமைகள் குறித்த ஆதாரங்களை முரசொலி நாளிதழ் தெள்ளத்தெளிவாக வெளியிட்டுள்ளது. ஆனால், தவெக தரப்போ அல்லது பிஜேபி தரப்போ அதற்கு எந்தவித ஆதாரத்தையும் தர முடியாமல் காலம் காலமாகப் பொய்களைப் பரப்பி வருகிறது. வைகோவின் மகன் துரை வைகோ, வரலாற்று ஆதாரமற்ற இந்த விவகாரத்தைத் தூக்கிப்பிடித்து அரசியல் செய்வது, வைக்கோவின் ஆரம்பகால அரசியல் மரியாதையையும் தாண்டி கீழ்த்தரமான அரசியலாக மாறியுள்ளது.”

விஜய்யின் சினிமா மற்றும் அரசியல் வரலாறு
“வரலாறு இல்லாதவர்களே வரலாற்றுத் தலைவர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவார்கள். தவெகவுக்கு என்று எந்த வரலாறும் கிடையாது. சினிமா பங்களிப்பில் கூட ராமராஜன், மோகன் கொடுத்த தொடர் வெற்றிகளையோ அல்லது கமல்ஹாசன் போன்ற உலகளவிலான கலைப் பங்களிப்பையோ விஜய் கொடுத்துவிடவில்லை. சினிமாவில் பெரிய சாதனை இல்லாத நிலையில், அரசியலிலும் இந்த 100 நாட்களில் எந்தத் தீர்வும் தர முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்” என்று அந்த அலசலில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ