spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்கள் ஆர்வமுடன் தங்களது மதிப்பெண்களை பார்த்து வருகின்றனர்.

we-r-hiring

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 08ம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 12,616 பள்ளிகளில் இருந்து 9,10,024 மாணவர்கள், 28,827 தனித்தேர்வர்கள் மற்றும் 235 சிறை கைதிகள் என மொத்தம் 9,39,086 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 48,700 தேர்வு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 3,350 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாணவர்கள் ஆர்வமுடன் தங்களது மதிப்பெண்களை பார்த்து வருகின்றனர். மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in என்ற இணையதளங்களில் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ