Homeசெய்திகள்தமிழ்நாடுபத்தாம் வகுப்பு முடித்தவர்கள் ஜே.ஈ.ஈ. தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் ஜே.ஈ.ஈ. தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

-

தமிழ்நாட்டில் 2020-21 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் 2023 ஜே.ஈ.ஈ. தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வி ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

2020-21 கல்வியாண்டில், கொரோனா பெருந்தொற்றின் விளைவாக ஊரடங்கு நடைமுறையில் இருந்த காரணத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. தமிழ்நாட்டிலும் அவ்வாறான சூழலே நிலவியது. ஆகவே பத்தாம் வகுப்பு படித்த அனைவரும் தேர்வானதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அப்போது அறிவித்தது. ‘அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி என்று சான்றிதழ் வழங்கப்பட்டது,

இப்போது, குறிப்பிட்ட அந்த மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளை 2023ல் எழுதவுள்ளனர்.

ஜே.ஈ.ஈ தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது பத்தாம் வகுப்பு மதிப்பெண் அல்லது தரநிலை கேட்கப்படுகிறது. ஆனால் நம் மாணவர்கள் அதை பூர்த்தி செய்ய இயலாத நிலையில் உள்ளனர்.

ஆகவே பெருந்தொற்றுக் கால அவசரநிலையை மனதிற்கொண்டு தமிழ்நாட்டு மாணவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை பூர்த்தி செய்யாமலேயே விண்ணப்பிக்கும் வசதி வேண்டும் என தேசிய தேர்வு முகமையிடம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை கோரிக்கை விடுத்துள்ளது. தேசிய தேர்வு முகமையும் இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்திருக்கிறது. எனவே ஜே.ஈ.ஈ. தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்கள் பதற்றமடையாமல் தேர்வுக்கு தங்களை தயார் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ