spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு2016-2019 வரை சிறையில் நடந்த முறைகேடுகளை  முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் - நீதிபதி ஆனந்த்...

2016-2019 வரை சிறையில் நடந்த முறைகேடுகளை  முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு

-

- Advertisement -
kadalkanni

மதுரை மத்திய சிறையில் 2016 முதல் 2021 வரை  சிறைக்கைதிகள் பொருட்கள் தயாரிக்க மூலப்பொருட்கள் வாங்கியதிலும், உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ததில் 1.63 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் அளிக்கப்பட்டது.

2016-2019 வரை சிறையில் நடந்த முறைகேடுகளை  முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவுஇந்த முறைகேடு தொடர்பாக மதுரை சிறைத்துறை எஸ்பி உள்பட 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கடலூர் சிறைத்துறை எஸ்பி எம்.ஊர்மிளா உள்ளிட்ட 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா, சங்கரசுப்பு, ஸ்ரீனிவாசன், சாந்தி, தனலெட்சுமி, வெங்கடேஸ்வரி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்தார். இதில் சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா அவர்கள் தனது மனுவில் 2016-2021 ஆம் ஆண்டுகளில் சிறையில் தொழிற்கூடத்தின் மேற்பார்வை செய்பவர்கள், கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் சிறை அலுவலர் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,

தற்போது தான் 12 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். 52 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  இந்த வழக்கு ஒரு முனை மட்டுமே அரசுக்கு ஏற்பட்ட இழப்பு இன்னமும் கண்டறியப்பட வேண்டும். 2016-2019 ஆம் ஆண்டுகளில் சிறைகளில் நடந்த முறைகேடு குறித்து இன்னும் விசாரிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அதிக பொது நலம் இருப்பதால், விசாரணை அதிகாரி சுதந்திரமாகவும் நேர்மையாகவும் செயல்பட  வேண்டும்.

சிறைகளில் நடைபெற்ற முறைகேடுகள் விசாரணையை உயர்நீதிமன்றம் வழக்கை கண்காணித்து வருகிறது. வழக்கு விசாரணையும் முக்கிய நிலையில் இருப்பதால் இந்நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன் ஜாமின் வழங்குவது வழக்கு விசாரணையை பாதிக்கும். ஆகவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார்.

MUST READ