Homeசெய்திகள்தமிழ்நாடு56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

-

- Advertisement -

மாநிலம் முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 3 கூடுதுல் டிஜிபிக்களுக்கு, டிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வாலுக்கு,  ஆயுதப்படை சிறப்பு டிஜிபியாகவும், ஏடிஜிபி வெங்கட்ராமனுக்கு நிர்வாகப் பிரிவு சிறப்பு டிஜிபியாகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தலைமையிட ஏடிஜிபி வினித் தேவ் வான்கடேவுக்கு, டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி கல்பனா நாயக், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண் குமாருக்கு, டிஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவரது மனைவியும், புதுக்கோட்டை எஸ்.பியும் ஆன வந்திதா பாண்டேவுக்கு, திண்டுக்கல் சரக டிஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ips transfer tamilnadu

திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா, புதுக்கோட்டை எஸ்.பி.யாக  மாற்றப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச், அரியலூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல் கிழக்கு இணை ஆணையர் சரோஜ் குமார், தலைமை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

MUST READ