பராமரிப்புப் பணி காரணமாக, நாளை (செப்.13) ஒன்பது மின்சார ரயில்கள் முழுமையாக ரத்துச் செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“மானுட சமத்துவத்தைப் பாடியவர் பாரதியார்”- கமல்ஹாசன் ட்வீட்!
அந்த அறிவிப்பில், சென்னை மூர் மார்க்கெட் முதல் அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரயிலும், சென்னை மூர் மார்க்கெட் முதல் திருத்தணி வரை செல்லும் மின்சார ரயிலும், அரக்கோணம் முதல் சென்னை மூர் மார்க்கெட் வரை செல்லும் மின்சார ரயிலும், திருத்தணி முதல் சென்னை மூர் மார்க்கெட் வரை செல்லும் மின்சார ரயிலும் நாளை (செப்.13) ஒருநாள் மட்டும் முழுமையாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
அதேபோல், சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து திருப்பதி வரை செல்லும் மின்சார ரயிலும் நாளை (செப்.13) ஒருநாள் மட்டும் முழுமையாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.