Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

-

- Advertisement -

 

செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
Photo: ED Raid

சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையை நடத்தி வருகிறது.

“மானுட சமத்துவத்தைப் பாடியவர் பாரதியார்”- கமல்ஹாசன் ட்வீட்!

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஜூன் மாதம் 14- ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, தற்போது நீதிமன்றக் காவலில் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி பிணைக் கோரி சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த மனு தொடர்பாக பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அமைச்சர் உதயநிதிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு!

இந்த நிலையில், இன்று (செப்.12) காலை 08.00 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய எட்டு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் வீடு, அண்ணாநகர் உள்ளிட்ட எட்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

MUST READ