
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நஷ்ட ஈடுக்கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
“மானுட சமத்துவத்தைப் பாடியவர் பாரதியார்”- கமல்ஹாசன் ட்வீட்!
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ரூபாய் 1.10 கோடி நஷ்ட ஈடுக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், “கோடநாடு வழக்கில் இருந்து தப்பிக்க சனாதனத்தை எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தன்னை பற்றி அவதூறாகப் பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
“ரூபாய் 1,000 திட்டத்தில் 1.06 கோடி மகளிர் பயன்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.