Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டம் ஒழுங்கு குறித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

சட்டம் ஒழுங்கு குறித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

-

- Advertisement -

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி  வந்த நிலையில்,  சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

we-r-hiring

குறிப்பாக, காவல்துறையை  நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று  (வியாழக்கிழமை) ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் உள்துறை செயலாளர், தலைமை செயலாளர் இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், சட்டம் ஒழுங்கை நல்ல முறையில் பராமரிக்க மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகளை குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் பாதுகாப்பை தீவிரப்படுத்துவது குறித்து, இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

MUST READ