Homeசெய்திகள்தமிழ்நாடுஆரணியில் சீமான் தேர்தல் பிரச்சாரம்!

ஆரணியில் சீமான் தேர்தல் பிரச்சாரம்!

-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆரணியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பாக்கியலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில் பேசிய அவர், மாற்றத்தை விரும்புகிற பிள்ளைகள் எங்களை பாருங்கள். எத்தனை முறை என்னை தோற்கடித்தீர்கள். மறுபடியும் உங்களுக்காக நிற்கிறேன். மாற்றத்தை கொண்டு வருவதற்காக நிற்கிறேன், என்னை கைவிடமாட்டார்கள் என அசைக்கமுடியாத நம்பிக்கையில் உங்களை நம்பி நிற்கிறேன். என் தங்கை பாக்கியலட்சுமிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து இந்திய பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள். என் அன்பு தங்கங்களே என் தங்கைக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். இது மாற்றத்திற்கான வரலாறு தந்திருக்கிற வாய்ப்பு. உங்கள் வாக்குகளை எளிய பிள்ளைகள் எங்களுக்கு தந்து மைக் சின்னத்திற்கு வாக்களித்து என் அன்பு தங்கை பாக்கியலட்சுமியை வெற்றி பெறச்செய்யுங்கள்.

மேலும் பேசிய அவர் திமுகவிற்கு தான் 50 வருஷம் ஓட்டு போட்டிர்களே புதுசா ஒரு சின்னம் வந்திருக்கு மைக் சின்னம் அதற்கு போடுங்கள் உங்கள் ஒட்டுகளை போட்டு பாரு ஒட்ட அப்புறம் பாரு நாட்ட. இனி இந்த தாமரைக்கு, கை சின்னத்திற்கு, உதயசூரியனுக்கு, இரட்டை இலைக்கு ஒட்டு போட்டிங்கனா உங்கள் கஷ்டம் ஒரு போதும் தீராது. இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. தலைவர் பிரபாகரன் வாழ்க…நாம் தமிழர் எனக்கூறி தனது உரையை முடித்தார்.

MUST READ