
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “தமிழகத்திற்கு வஞ்சனை செய்யும் பா.ஜ.க.வை அ.தி.மு.க. பாதுகாக்கிறது. காவிரி விவகாரம் தொடர்பான அடிப்படை புரிதல் இல்லாமல் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு வைக்க வேண்டும், பா.ஜ.க.வைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
“பட்டாசு ஆலை உயிரிழப்பு- தலா ரூபாய் 3 லட்சம் நிதி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
காவிரி நீர் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை கர்நாடகம் நடைமுறைப்படுத்த வேண்டும். கர்நாடக அரசிடம் பேசித் தீர்வுக் காண முடியாது என்பதால் தான் உச்சநீதிமன்றத்தை நாடுகிறோம். காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்கள் நேரடியாக மோதிக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே ஆணையம், குழு அமைக்கப்பட்டுள்ளது.
“கூட்டணிக்காக தி.மு.க. நாடகமாடுகிறது”- அண்ணாமலை குற்றச்சாட்டு!
பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போது, காவிரி தொடர்பான நிபந்தனையை அ.தி.மு.க. ஏன் வைக்கவில்லை? காவிரி விவகாரத்தில் முழுமையான தீர்வு காண மத்திய அரசால் தான் முடியும். காவிரி விவகாரத்தில் தீர்வு காணும் முழு பொறுப்பு மத்திய அரசுக்கு தான் உண்டு என்பதை எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.