Homeசெய்திகள்தமிழ்நாடு"சினிமா, அரசியலில் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த்"- பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்!

“சினிமா, அரசியலில் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த்”- பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்!

-

 

"சினிமா, அரசியலில் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த்"- பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்!

திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சுமார் 20,000 கோடி மதிப்பிலான முடிவுற்றத் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

திருச்சி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

அதைத் தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “விஜயகாந்தின் மறைவு திரைத்துறைக்கு மட்டுமல்ல அரசியலுக்கும், மக்களுக்கும் இழப்பு. சினிமாவிலும், அரசியலிலும் கேப்டனாகத் திகழ்ந்தவர் விஜயகாந்த். திரைப்படங்களில் அவரது செயல்பாடு மூலம் மக்களின் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டிருந்தார். அரசியல்வாதியாக தேசிய நலனை முன்னிறுத்தினார் விஜயகாந்த்.

சிங்கப்பெருமாள் கோவில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவும் மிகவும் வேதனையை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டின் இறுதியில் மழை, வெள்ளம் மூலம் தமிழக மக்கள் அதிக வலிகளை அனுபவித்தீர்கள். தமிழகத்தில் கனமழையால் உயிரிழப்பு, பொருட்கள் இழப்புகள் ஏற்பட்டன. இந்த துயரமான சூழலில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது. திருவள்ளுவர், பாரதியார் போன்ற ஞானிகள் அற்புதமான இலக்கியங்களை படைத்துள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ