- Advertisement -
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு
ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து சரிவை கண்ட தங்கம் விலை தற்போது மீண்டும் சவரன் 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த ஆண்டுதான். விழாக்காலமான அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் தங்க விற்பனை அதிகரித்ததும் ஆர்பிஐ கொள்முதலில் இறங்கியதுமே தங்கத்தின் தேவை அதிகரித்ததற்கு காரணம் என தெரிகிறது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.240 அதிகரித்து ரூ.45,040- க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ. 5,630-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.80.40-க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ.80,400 எனவும் விற்பனையாகிறது.


