
கனமழை எதிரொலியாக, சென்னையில் காய்கறிகளின் விலை கிலோவுக்கு சராசரியாக ரூபாய் 10 வரை உயர்ந்துள்ளது. மழை பாதிப்பால், கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்தது காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா…. இரட்டைக் குழந்தைகளுடன் பத்திரமாக மீட்பு!
ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 55, தக்காளி ரூபாய் 32, கத்தரிக்காய் ரூபாய் 40, இஞ்சி ரூபாய் 90, அவரை ரூபாய் 50 வரை விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் வரத்து சீராகி ஓரிரு நாளில் காய்கறிகளின் விலை குறையும் என்று கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோலியம் தொழிற்சாலைகளில் இருந்து வரும் கச்சா எண்ணெய் எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கலந்துள்ளது. தொழிற்சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அங்கிருந்து வெளியேறும் கச்சா எண்ணெய் ஆற்றில் கலக்கிறது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்…. 200 குடும்பங்களுக்கு பண உதவி செய்த KPY பாலா!
அதேபோல், சென்னையில் மின்தேவை 2,000 மெகாவாட் அளவிற்கு உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.