Homeசெய்திகள்தமிழ்நாடுகுழிக்குள் இருந்து மீட்ட குழந்தை உயிரிழப்பு! தகாத உறவால் நடந்த கொடூரம்

குழிக்குள் இருந்து மீட்ட குழந்தை உயிரிழப்பு! தகாத உறவால் நடந்த கொடூரம்

-

குழிக்குள் இருந்து குழந்தை உயிரிழப்பு! தகாத உறவால் நடந்த கொடூரம்

திருவள்ளூர் அருகே குழிக்குள் உயிருடன் மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் ஊராட்சி கொசவன்பாளையம் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே சுமார் 10 அடிக்கும் மேல் ஆழம் உள்ள வறண்ட குழியில் இருந்து குழந்தை அழுகுரல் கேட்பதாக அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது குழிக்குள் பச்சிளம் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதைப்பற்றி கிராம நிர்வாக அலுவலர் லோகநாதனுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் காவல்துறையினருக்கு அளித்த தகவல் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் வறண்ட சுமார் 10அடி ஆழத்திற்கு மேல் உள்ள குழியில் இருந்து தொப்புள் கொடியுடன் முகத்தில் சிறு சிறு ரத்த காயங்களுடன் இருந்த குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தை யாருடையது என்பது குறித்து திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த லதா என்பவர் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது கணவர் சங்கர் என்பவர் உயிரிழந்துள்ளார்.

baby

இதை அடுத்து லதாவிற்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்துள்ளது. அதனால் கர்ப்பமான நிலையில் குழந்தையை பெற்று அருகில் உள்ள குளத்தில் வறண்ட நிலையில் சுமார் 10அடிக்கு மேல் உள்ள குழியில் போட்டு மண் கட்டிகளை மேலே போட்டுக் கொள்ள முயற்சி செய்துள்ளார். அப்போது அப்பகுதியில் மக்கள் நடமாடிக் கொண்டிருக்கவே அப்படியே விட்டுவிட்டு சென்ற நிலையில் குழந்தையை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து லதாவை போலீசார் கைது செய்து கள்ளக்காதலன் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் இறந்ததால் தகாத உறவால் பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக தாயை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ