தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று (டிச.30) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசுகிறார்.
மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் – டாக்டர் இராமதாஸ் வேண்டுகோள்!
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (டிச.30) மாலை 05.00 மணியளவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசவிருக்கிறார். இந்த சந்திப்பின் போது, நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக, ஆளுநரிடம் முதலமைச்சர் வலியுறுத்த வாய்ப்புள்ளது.
ஆண்டின் முதல் பேரவைத்தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதால் ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட வாய்ப்புள்ளது.
“எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கட்சியை மீட்பதே எண்ணம்”- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!
மசோதாக்கள் ஒப்புதல் தொடர்பாக, இருவரும் அமர்ந்து பேசலாமே என உச்சநீதிமன்றம் யோசனை கூறியிருந்த நிலையில், முதலமைச்சர் ஆளுநரைச் சந்தித்துப் பேசவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.