Homeசெய்திகள்தமிழ்நாடுசெங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் 4 பேர் பலி - மு.க.ஸ்டாலின் இரங்கல்!

செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் 4 பேர் பலி – மு.க.ஸ்டாலின் இரங்கல்!

-

'மத்திய அரசு நிதி பாகுபாடு'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், வாயலூர் கிராமம். கிழக்குக் கடற்கரை சாலையில் நேற்று இரவு சுமார் 9.30 மணிக்கு பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மரத்தின் மீது மோதிய விபத்தில், அதில் பயணம் செய்த சென்னைச் சேர்ந்த திரு. ராஜேஷ், த/பெ.மணி, திரு.மாதேஷ். த/பெ.ராஜி, திரு.யுவராஜ். த/பெ.மாரியப்பன், திரு. ஏழுமலை, த/பெ. சுந்தரமூர்த்தி ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

"சீண்டிப் பார்க்க வேண்டாம்; எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும்....."- மத்திய பா.ஜ.க. அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

மேலும், திரு.விக்னேஸ்வரன், த/பெ. கார்த்தி என்பவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும். எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ