spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு: நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு!

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு: நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு!

-

- Advertisement -

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க காவல்துறையினர் 2 தனிப்படைகளை அமைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

kasturi
kasturi

சென்னையில் அண்மையில் பிராமணர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்தார். அவரது பேச்சுக்கு தெலுங்கு சமூக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கஸ்தூரிக்கு எதிராக தெலுங்கு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் புகார் அளித்தனர். அதன் பேரில் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவு அடிப்படையில் எழும்பூர் காவல்நிலைய போலீசார் 4 பிரிவுகளின் கீழ் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

we-r-hiring

உயர்நீதிமன்ற மதுரை கிளை

இந்த நிலையில் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நேற்று போலீசார் சம்மன் கொடுக்க சென்றபோது நடிகை கஸ்தூரி தலைமறைவானது தெரியவந்தது. மேலும், கஸ்தூரியின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, கஸ்தூரியை பிடிக்க எழும்பூர் போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். மேலும், அவர் வேறு செல்போனை  பயன்படுத்துகிறாரா? என்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சர்ச்சை பேச்சு விவகாரத்தில் நடிகை கஸ்தூரி முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ