Homeசெய்திகள்தமிழ்நாடு"மக்கள் அனைவருக்கும் தெரிவது 'ஊழல் மோடி' தான்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

“மக்கள் அனைவருக்கும் தெரிவது ‘ஊழல் மோடி’ தான்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

-

 

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்!

குஜராத் மாடல் போலியானது என்பதும் வளர்ச்சியின் நாயகன் பொய்யானதும் என்பதும் தெரிந்துவிட்டது என தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தக் லைஃப் படப்பிடிப்பு தொடக்கம்… சிம்புவின் காட்சிகள் படமாக்கம்…

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குஜராத் மாடல் போலியானது என்பதும் வளர்ச்சியின் நாயகன் பொய்யானது என்பதும் தெரிந்துவிட்டது. இப்போது மக்கள் அனைவருக்கும் தெரிவது ஊழல் மோடி தான். தனது சுயநல அரசியலுக்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் பிரதமர் மோடி நாசப்படுத்திவிட்டார்.

10 ஆண்டுகளில் எல்லா தளங்களிலும் மோடி அரசு படுத்தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இரண்டு முறை இருண்ட காலத்தைக் காட்டிய பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இந்தியா கூட்டணியின் வெற்றியில் தான் நாட்டின் எதிர்காலமும், தமிழகத்தின் முன்னேற்றமும் உள்ளது. 2019- ஆம் ஆண்டு முதல் வலுவான கூட்டணியை அமைத்து அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுகிறது.

ரத்னம் படத்திற்கு யுஏ சான்றிதழ்… ஏப்ரல் 26 வெளியீடு…

தி.மு.க. எப்போதும், எல்லாத் தேர்தல்களிலும் வென்றது என்பதை மெய்ப்பிக்கும் தேர்தல் இது. ஒருவரை ஒருவர் எதிர்ப்பது போல் நாடகமாடினாலும் தேர்தலுக்கு பின் பா.ஜ.க.- அ.தி.மு.க. கைக்கோர்த்துவிடும். இந்திய நாட்டின் இரண்டாவது விடுதலை போர் என்று இந்த தேர்தல் அழைக்கப்படுகிறது. நீதியின் பக்கம் நின்று இந்தியா கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடி தாருங்கள். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் ஆட்சி தொடர்ந்து விடக்கூடாது என்பதை முடிவெடுக்கும் தேர்தல் இது. தமிழ்நாட்டின் தனித்தன்மையை நிலைநாட்ட நம் முன் உள்ள ஒரே வாய்ப்பு, ஆயுதம் உங்கள் வாக்குதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ