spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளச்சாராயம் -பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

கள்ளச்சாராயம் -பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

-

- Advertisement -

மூவரின் உயிரை குடித்தது! மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய கலாச்சாரம்! கொதித்தெழுந்த எடப்பாடி பழனிச்சாமி!

கள்ளச்சாராய உயிரிழப்பு நான்காக அதிகரித்திருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 16 பேர் உடல்நிலை மோசம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்க பட்டிருந்தனர். ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பேர் ஏற்கனவே உயிரிழந்திருக்கும் நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜமூர்த்தி உயிரிழந்திருக்கிறார் . கள்ளச்சாராய உயிரிழப்பு நான்காக அதிகரித்து இருப்பதை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

we-r-hiring

விழுப்புரத்தில் அதிர்ச்சி! கள்ளச்சாராயம் குடித்த16 பேர் மருத்துவமனையில் - 3 பேர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் அருகே இருக்கும் எக்கியார் குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 16 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் 16 பேரும் புதுச்சேரி ஜிப்மர், முண்டியம்பாக்கம் , மரக்காணம் ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் .

இந்த சம்பவத்தில் அந்த சாராய வியாபாரி அமரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனாலும் மூன்று பேரின் உயிரிழப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் . கள்ளச்சாராய விற்பனை ஒழிய வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

வருத்தத்துக்குரிய செய்திகள் வருகிறது. மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த விடியா ஆட்சியின் நிர்வாக திறமையின்மையால் கள்ளச்சாராய கலாச்சாரம் தமிழ்நாட்டில் தலைதூக்கியுள்ளது. இதே மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை தீவிரமாக இருப்பதாக கடந்த ஜனவரி மாதமே செய்திகள் வந்தன. அவற்றை அறிந்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தற்போது நிகழ்துள்ள இந்த மரணங்களுக்கு விடியாஅரசு பொறுப்பேற்க வேண்டும். இனியாவது கள்ளசாராயத்தை அறவே ஒழிக்க இந்த விடியா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆத்திரப்பட்டிருந்தார்.

கள்ளச்சாரய உயிர்பலிக்கு எதிர்க்கட்சிகள் அனைவரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜமூர்த்தி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இதன் மூலம் உயிர்ப்பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்திருக்கிறது.

MUST READ