தமிழ்நாடு

ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரயில் மறியல்

Published by
Aishwarya
Share

ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரயில் மறியல்

விலைவாசி உயர்வை கண்டித்தும், அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தியும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு கண்டித்தும், அறிவித்தப்படி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தியும் பாஜக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டங்களும், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில் சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஒன்றாம் நடைமேடை தண்டவாளத்தில் சுமார் 30 நிமிடம் ரயில் மறியலில் ஈடுபட்டதால், அந்த நடைமேடை ரயில் சேவை சுமார் 30 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. ரயிலை மறித்து மறியலில் ஈடுபட்ட நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். தொடர்ந்து ரயில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்று வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் வேலையில் இருப்பவர்கள் வேலையை விடும் நிலைக்கு வந்தார்களே தவிர புதிய வேலை வாய்ப்பு இல்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மோடி அரசை கண்டித்து தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகம் முற்றுகை போராட்டம், ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த பிரச்சனைகளை எல்லாம் திசை திருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறார்கள். சனாதானத்திற்கு எதிராக பேசிவிட்டார்கள் என நாடு முழுவதும் பதற்றமான நிலையை உருவாக்குகிறார்கள். விலைவாசி உயர்வு,வேலை இல்லா திண்டாட்டத்தில் இருந்து மக்கள் கனவத்தை திசை திருப்பி பாஜக அரசின் மீது கவனத்தை ஏற்படுத்தவே இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்ற முயற்சிக்கிறார்கள்” எனக் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற
Show comments

Recent Posts

சலார் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ்… முன்பதிவு தொடக்கம்…

பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் சலார் படத்திற்கு, தணிக்கைக்குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. கேஜிஎஃப் படத்தின் மூலம்…

டிசம்பர் 9, 2023 9:55 மணி

மீண்டும் இணைந்த த்ரிஷயம் பட கூட்டணி…..மோகன்லாலின் ‘நேரு’ டிரைலர் வெளியீடு!

நடிகர் மோகன்லால் அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள மலைக்கோட்டை வாலிபன்…

டிசம்பர் 9, 2023 9:15 மணி

ஸ்டார் திரைப்படத்திலிருந்து புகைப்பட ஆல்பம் வெளியீடு

கவின் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்டார் திரைப்படத்திலிருந்து புகைப்பட ஆல்பம் வீடியோ வெளியாகியுள்ளது. கோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகன்களில் ஒருவர் கவின்.…

டிசம்பர் 9, 2023 6:11 மணி

நேற்று ரூ.2 லட்சம், இன்று ரூ.3 லட்சம்… களத்தில் நடிகர் பாலா…

நடிகர் பாலா சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை துரைப்பாக்கம் பகுதி மக்களுக்கு வழங்கி உள்ளார். சென்னையை…

டிசம்பர் 9, 2023 6:04 மணி

மிக்ஜாம் புயல் பாதிப்பு: ரூ.1 லட்சம் நிதி வழங்கினார் கவிஞர் வைரமுத்து

புயல் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறார். வங்கக்கடலில் உருவான…

டிசம்பர் 9, 2023 5:40 மணி

அம்பத்தூரில் கஞ்சா வளர்த்த 3 பேரை காவல் நிலையத்தில் தீவிர விசாரணை

அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா செடி வளர்த்ததாக 3 பேரை காவல் நிலையம் அழைத்துவந்து தீவிர…

டிசம்பர் 9, 2023 5:00 மணி