இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மூத்த அரசியல் தலைவர்; பல தேசியத் தலைவர்களின் அன்புக்குரியவர். இந்திய அரசியல் பற்றிய ஆழமான புரிதலுடன், சமூக நல்லிணக்கத்துக்காக தன் வாழ்நாளெல்லாம் உழைத்து வரும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்அவர்களுக்கு இவ்விருது வழங்குவது மிகவும் பொருத்தமானது.

தகைசால் தமிழர் விருது வழங்க தெரிவு செய்யும் குழுவினருக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளாா்.