Homeசெய்திகள்தமிழ்நாடுபோதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஓங்கிஅடிப்போம் - ஈபிஎஸ்

போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஓங்கிஅடிப்போம் – ஈபிஎஸ்

-

நாங்கள் யார் என்பதை மதுரை மாநாட்டில் நிருபிப்போம் - அதிமுக தொண்டர்கள் உற்சாகம்..
File Photo

போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஒற்றைவிரலால் ஓங்கிஅடிப்போம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே. உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை. வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று திருச்சியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களையெல்லாம் சந்திக்க வருகிறேன்!

#தமிழர்_உரிமை_மீட்போம்! #தமிழ்நாடு_காப்போம்! நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளையும், மாநில உரிமைப் பறிப்புகளையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம், வாக்களிப்பீர் #இரட்டைஇலை என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ