Homeசெய்திகள்தமிழ்நாடுதிற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு! சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அருகில் செல்லத் தடை...

திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு! சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அருகில் செல்லத் தடை…

-

- Advertisement -

கன்னியாக்குமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் அருகிலுள்ள திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்குகன்னியாக்குமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் கோதை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருகிலுள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்குஇந்நிலையில், திற்பரப்பு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வெள்ளப் பெருக்கு காரணமாக பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி திற்பரப்பு அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் ரப்பர் பால் பணிகள் பொிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் பணிக்கு செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்குமேலும், குற்றாலம் அருகளிலும் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடரும் இந்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் குளிக்க இரண்டாவது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்குநாகை மாவட்டத்திலும் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவா்கள் கடலுக்கு செல்ல முடியாமல் பெரிதும் தவித்து வருகின்றனா்.

தகுதியான கவுரவ விரிவுரையாளர்கள் 2 மாதங்களில் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

MUST READ