- Advertisement -
சென்னையில் 22 கேரட் ஆபணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.53 ஆயிரத்து 720க்கு வர்த்தகமாகிறது.
சென்னையில் கடந்த 4 நாட்களாக ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி வர்த்தகமாகி வந்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் வரை உயர்ந்து வர்த்தகமாகிறது.சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.53 ஆயிரத்து 720க்கு வர்த்தகமாகிறது. இதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, கிராம் ரூ.6 ஆயிரத்து 715க்கு விற்பனையாகிறது.
இதேபோல் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி கிராம் ரூ.93 ரூபாய் 50 காசுகளுக்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.93 ஆயிரத்து 500க்கு விற்பனையாகிறது.