spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதொடர்ந்து ஏற்றம் காணும் தங்கம் விலை - கவலையில் இல்லத்தரசிகள்!

தொடர்ந்து ஏற்றம் காணும் தங்கம் விலை – கவலையில் இல்லத்தரசிகள்!

-

- Advertisement -

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

we-r-hiring

சென்னையில் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏறி, இறங்கி வருகிறது. கடந்த சனிக்கிழமை முதல் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாயும், கிராமுக்கு 15 ரூபாயும் அதிகரித்தது. அதாவது ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து, ரூ.46,600க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ரூ.5,825க்கு விற்பனையானது. விடுமுறை தினமான நேற்று விலை மாற்றமின்றி சவரன் ரூ.46,600க்கும், ஒரு கிராம் ரூ.5,825க்கும் விற்பனையானது. ‘

இன்று முதல் HUID நகைகளை மட்டுமே விற்க அனுமதி!

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. திங்கள் கிழமையான இன்று தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாயும், கிராமுக்கு 5 ரூபாயும் உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.46,640 விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 கிராமுக்கு ரூ.5830க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.77.00க்கும், ஒரு கிலோ ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

MUST READ