Homeசெய்திகள்தமிழ்நாடுதொடர் உச்சத்தில் தங்கம் விலை - ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்குகிறது!

தொடர் உச்சத்தில் தங்கம் விலை – ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்குகிறது!

-

இன்று முதல் HUID நகைகளை மட்டுமே விற்க அனுமதி!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,640-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திங்கள் கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,660 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 53,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,670-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 53,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்த நிலையில், இன்றும் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ. 6,725-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ.88.50-க்கும், கிலோவுக்கு ரூ.88,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

MUST READ