
காந்தி ஜெயந்தியையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று (அக்.02) கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. மாநிலம் முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
“மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது”- அண்ணாமலை அதிரடி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொளி குறும்பட உரையின் மூலம் கூட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். கிராம சபைக் கூட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அனைத்து ஊராட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஊராட்சிகளின் நிதிநிலை அறிக்கை மழைநீர் சேகரிப்பு, தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்டவைக் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இதில் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிராம சபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மக்களின் குரலை எதிரொலிக்கும் மன்றமாக கிராம சபைக் கூட்டங்கள் அமைந்துள்ளன. மாற்றுத் திறனாளி, முதியோர், குழந்தைகள் நலனில் கிராம சபைகள் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும். கல்விக்காக தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு கிராம சபைகள் பாலமாக அமைய வேண்டும்.
சென்னையில் இன்று 41 ரயில்கள் ரத்து!
மகளிர், பழங்குடியினர், ஆதிதிராவிடர் அதிகளவில் கலந்து கொள்வதை உறுதிச் செய்ய வேண்டும். கிராம சபைக் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் அனைவரது கருத்தையும் பதிவுச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.