spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகனமழை: சென்னை புத்தகக்காட்சி இன்று ரத்து.... பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து!

கனமழை: சென்னை புத்தகக்காட்சி இன்று ரத்து…. பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து!

-

- Advertisement -

 

கனமழை: சென்னை புத்தகக்காட்சி இன்று ரத்து.... பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து!

we-r-hiring

தென்மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சிக் காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, சென்னையில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஜி.பி. முத்து!

சென்னையில் நங்கநல்லூர், சிட்லபாக்கம், வடபழனி அசோக் நகர், ஈக்காட்டுதாங்கல், கிண்டி, வில்லிவாக்கம் மடிப்பாக்கம், குரோம்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, பூந்தமல்லி, திருவேற்காடு, காட்டுப்பாக்கம் ஐயப்பன்தாங்கல், திருநின்றவூர், ஆவடி, போரூர், மதுரவாயல், அம்பத்தூர், பாடி, கொரட்டூர் வளசரவாக்கம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக, சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக்காட்சி இடம் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் இன்று (ஜன.08) மட்டும் புத்தகக்காட்சி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையால் விடுமுறை விடப்பட்டதால், இன்று நடைபெறவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தாத நயன்தாரா….வேதனையில் ரசிகர்கள்!

இதனிடையே, தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடடத்தக்கது.

MUST READ