Homeசெய்திகள்தமிழ்நாடுடெல்டா மாவட்டங்களில் கனமழை: 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு – நிவாரணம் வழங்க எடப்பாடி...

டெல்டா மாவட்டங்களில் கனமழை: 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு – நிவாரணம் வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

-

- Advertisement -

சேத மதிப்பீட்டிற்குப் பின் நிவாரணம் வழங்கப்படும் என அரசு விளக்கம் டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கிப் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கவலை தெரிவித்துள்ளார்.டெல்டா மாவட்டங்களில் கனமழை: 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு – நிவாரணம் வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

அதேவேளையில், பயிர் சேதங்கள் குறித்துக் கணக்கெடுக்கப்பட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

தார்பாய் மூடிய நெல்லும் வீணடிப்பு: எடப்பாடி பழனிசாமி சாடல்டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “திடீர் கனமழையால் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கிப் பெரும் சேதமடைந்துள்ளன.

மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தார்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டிருந்த அறுவடை செய்த நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து முளைத்து வீணாகியுள்ளன என்று குற்றம்சாட்டினார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக ஏக்கருக்குத் தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசுத் தரப்பு விளக்கம்: அமைச்சர் பதில்
எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர், “டெல்டா பகுதியில் 151.4 மி.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இருப்பினும், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வேளாண்மை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் கள ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.  மேலும், பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தின் அளவைத் துல்லியமாகக் கணக்கிட்டு, பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணத் தொகை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

“ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசம்!” – முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: குடும்பத் தலைவிகளுக்கு ரூ.3,000 வரை சேமிப்பு!

MUST READ